sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தேர்தல் நேரத்தில் பொய் வாக்குறுதி: வாசன் காட்டம்

/

தேர்தல் நேரத்தில் பொய் வாக்குறுதி: வாசன் காட்டம்

தேர்தல் நேரத்தில் பொய் வாக்குறுதி: வாசன் காட்டம்

தேர்தல் நேரத்தில் பொய் வாக்குறுதி: வாசன் காட்டம்


ADDED : மார் 29, 2024 12:13 AM

Google News

ADDED : மார் 29, 2024 12:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் தனி தொகுதி பா.ம.க., வேட்பாளர் ஜோதியை ஆதரித்து, த.மா.கா., தலைவர் வாசன், உத்திரமேரூரில் நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது, அவர் பேசியதாவது:

இந்தியாவில், மூன்றாவது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைவது உறுதி. எனினும், தமிழகத்தில் இருந்து பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர்கள் லோக்சபா எம்.பி.,யாக அங்கம் வகிக்க வேண்டும் என்பதுதான் நம் இலக்கு.

தி.மு.க., கடந்த சட்டசபை தேர்தலில் இதை செய்வோம், அதை செய்வோம் என, பல பொய்யான வாக்குறுதிகள் அளித்து, ஏமாற்றி ஆட்சியை பிடித்தனர்.

ஆட்சிக்கு வந்ததும் மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, பத்திரப்பதிவு தொகை உயர்வு என ஏழை, எளிய மக்களின் தலையில் பாரம் சுமத்தினர்.

அனைத்து தரப்பு மக்களின் எண்ணங்களையும் பிரதிபலிக்கும் பா.ஜ., தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று, இந்தியா வல்லரசாக மாற, மோடி தலைமையிலான ஆட்சி தொடர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us