/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கல்திருப்பி உள்ளான் பறவை பள்ளிக்கரணையில் முதல்முறை
/
கல்திருப்பி உள்ளான் பறவை பள்ளிக்கரணையில் முதல்முறை
கல்திருப்பி உள்ளான் பறவை பள்ளிக்கரணையில் முதல்முறை
கல்திருப்பி உள்ளான் பறவை பள்ளிக்கரணையில் முதல்முறை
ADDED : செப் 18, 2024 12:27 AM

சென்னை,
வேளச்சேரி முதல் பெரும்பாக்கம் வரை பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பரவியுள்ளது. இங்கு வரும் பறவைகள், கணக்கெடுப்பு வாயிலாக பதிவு செய்யப்படுகிறது.
இவ்வகையில், 'தி நேச்சர் டிரஸட்' வாயிலாக பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதுவரை, 199 வகை பறவைகளின் வருகை ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதில், 75 வகை பறவைகள் வலசை வருபவை.
இந்நிலையில், 200வது வகை பறவையாக, கல்திருப்பி உள்ளான் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, 'தி நேச்சர் டிரஸ்ட்' அமைப்பின் திருநாரணன் மற்றும் சந்திரகுமார் ஆகியோர் கூறியதாவது:
பூமியின் வட கோளத்தை ஒட்டிய, வட அமெரிக்காவின் வடக்கு பகுதிகளில் கல்திருப்பி உள்ளான் வசிக்கும். அங்கு, குளிர் அதிகரிக்கும் போது, உணவு உள்ளிட்ட தேவைகளுக்காக, இந்தியா போன்ற நாடுகளுக்கு வருவது வழக்கம்.
இந்த வகையில் தமிழகத்தின் பழவேற்காடு, கேளம்பாக்கம் அடுத்த முட்டுக்காடு முகத்துவாரம் உள்ளிட்ட பகுதிகளில் கல்திருப்பி உள்ளான் பரவலாக வருவதை பார்த்து இருக்கிறோம்.
ஆனால், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் இதன் வருகை ஆவணப்படுத்தப்படாமல் இருந்தது.
தற்போது, இரண்டு கல்திருப்பி உள்ளான் பறவைகள், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் முகாமிட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
லேசான கறுப்பு, சாம்பல், வெள்ளை ஆகிய நிறங்கள் கலந்ததாக இவை காணப்படும். பள்ளிக்கரணையில் தற்போது நீர்மட்டம் குறைந்த வருவதால், உணவு எளிதாக கிடைக்கும் என்பதால், இவை இங்கு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.