ADDED : ஆக 01, 2024 12:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேப்பேரி, பெரம்பூரைச் சேர்ந்தவர் முகமது அகில் உசைன், 43. இவர், 'வந்தா வெட்டுவோம்' என்ற பெயரில், சலுான் கடைகாரர்.
இவர் முதலீடு ஆசைக்காட்டி 8 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாக, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதில், 'சலுான் கடையில் முதலீடு செய்தால், மாதந்தோறும், 2 லட்சம் ரூபாய் லாபம் தருவதாகவும், லாபம் கிடைக்காவிட்டால் முதலீடு செய்த பணத்தை திரும்ப கொடுத்துவிடுவதாகவும் ஆசை வார்த்தை கூறினார்.
இதை நம்பி பலரும் முதலீடு செய்துள்ளனர். ஆனால், ஏமாற்றிவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.