/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சுதந்திர போராட்ட அருங்காட்சியகம் அரசு வேண்டுகோள்
/
சுதந்திர போராட்ட அருங்காட்சியகம் அரசு வேண்டுகோள்
ADDED : ஏப் 28, 2024 12:50 AM
சென்னை:'சென்னையில் அமைய உள்ள அருங்காட்சியகத்திற்கு, பொது மக்கள் தங்களிடம் உள்ள, சுதந்திரப் போராட்டம் தொடர்பான பொருட்களை நன்கொடையாக வழங்க வேண்டும்' என, அருங்காட்சியகங்கள் துறை கமிஷனர் அரவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மெரினா கடற்கரை எதிரில், பாரம்பரிய கட்டடமான ஹுமாயூன் மஹால் கட்டடத்தில், 80,000 சதுர அடி பரப்பளவில், அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது.
எனவே, பொது மக்கள் தங்கள் வசம் உள்ள, சுதந்திரப் போராட்டம் குறித்த பழங்கால ஆவணங்கள், கையெழுத்துப் பிரதிகள், செய்தித்தாள்கள், ஜெயில் வில்லைகள், ராட்டைகள், பட்டயங்கள், ஐ.என்.ஏ., சீருடைகள், ஐ.என்.ஏ., அஞ்சல் தலை, ரூபாய் நோட்டுகள் போன்ற இனங்களை, நன்கொடையாக அளிக்கலாம்.
இவற்றை சென்னை அல்லது 23 மாவட்ட அருங்காட்சியகங்களுக்கு நேரடியாக சென்று வழங்கலாம். இதற்கு ஒப்புகைக் கடிதம், சான்றிதழ் வழங்கப்படும். இவை மக்கள் பார்வைக்கு வைக்கப்படும்போது, அதை வழங்கியவர்களின் பெயர்களும் இடம்பெறும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

