sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கிண்டி ரயிலில் கற்கள் வீச்சு வழக்கில் 3 மாணவர்கள் கைது

/

கிண்டி ரயிலில் கற்கள் வீச்சு வழக்கில் 3 மாணவர்கள் கைது

கிண்டி ரயிலில் கற்கள் வீச்சு வழக்கில் 3 மாணவர்கள் கைது

கிண்டி ரயிலில் கற்கள் வீச்சு வழக்கில் 3 மாணவர்கள் கைது


ADDED : மார் 13, 2025 12:47 AM

Google News

ADDED : மார் 13, 2025 12:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னை பச்சையப்பன் கல்லுாரி மாணவர்களுக்கும், நந்தனம் கல்லுாரி மாணவர்களுக்கும் இடையே, சமூக வலைதளமான 'இன்ஸ்டா'வில் ரீல்ஸ் பதிவிட்டது சம்பந்தமாக முன்விரோதம் ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த மாதம் 14ம் தேதி, பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள் கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு, ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

கிண்டி ரயில் நிலையம் அருகே சென்றபோது, நந்தனம் அரசு கல்லுாரி மாணவர்கள், பச்சையப்பன் கல்லுாரி மாணவர்களை நோக்கி கற்களை வீசினர். இதில் ரயிலில் பயணம் செய்த வழக்கறிஞர் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து, ரயில்வே போலீஸ் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வந்தது.

இந்நிலையில், நந்தனம் கல்லுாரி மாணவர்கள் யுவராஜ், 19, சூர்யா, 18, அய்யப்பன், 19 ஆகிய மூன்று பேரையும், ரயில்வே போலீசார் நேற்று கைது செய்தனர்.

மேலும், இந்த மூன்று பேர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, நந்தனம் அரசு கல்லுாரி நிர்வாகத்திற்கு, மாம்பலம் ரயில்வே போலீசார் கடிதம் எழுதியுள்ளனர்.






      Dinamalar
      Follow us