sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

உயர்மட்ட மேம்பால சாலை விரைந்து முடிக்க உத்தரவு 

/

உயர்மட்ட மேம்பால சாலை விரைந்து முடிக்க உத்தரவு 

உயர்மட்ட மேம்பால சாலை விரைந்து முடிக்க உத்தரவு 

உயர்மட்ட மேம்பால சாலை விரைந்து முடிக்க உத்தரவு 


ADDED : மார் 13, 2025 11:43 PM

Google News

ADDED : மார் 13, 2025 11:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, 'சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நீர் வளத் துறை, நெடுஞ்சாலைகள், சென்னை மாநகராட்சி உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்' என, அமைச்சர் வேலு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில், மத்திய அரசின், 'பாரத்மாலா பரியோஜனா' திட்டத்தின் கீழ், சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை, 21 கி.மீ., இரண்டு அடுக்கு, நான்கு வழித்தட உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணியை, 5,510 கோடி ரூபாயில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

இதற்கு நிலம் கையகப்படுத்தும் பணியை, தமிழக அரசு, சென்னை துறைமுக ஆணையமும் தலா, 50 சதவீத பங்குடன் மேற்கொண்டு வருகின்றன. மேம்பால சாலை அமைக்கும் பணி, 2023 நவம்பரில் துவங்கியது.

இந்த பணிகளின் நிலை குறித்து, நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு, சென்னையில் நேற்று, அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார்.

இதில், அமைச்சர் வேலு பேசியதாவது:

இப்பணிக்கான ஒப்பந்த காலம் முடிய, 30 மாதங்களே உள்ளதால், குறிப்பிட்ட காலத்திற்குள் விரைவாக முடிக்க, நீர் வளத் துறை, நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை, சென்னை மாநகராட்சி, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், சென்னை கலெக்டர் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us