/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இடைத்தரகர் மனுக்களுக்கு 'உடனடி தீர்வு' பூந்தமல்லி சார் - பதிவாளர் ஆபீசில் 'சேவை'
/
இடைத்தரகர் மனுக்களுக்கு 'உடனடி தீர்வு' பூந்தமல்லி சார் - பதிவாளர் ஆபீசில் 'சேவை'
இடைத்தரகர் மனுக்களுக்கு 'உடனடி தீர்வு' பூந்தமல்லி சார் - பதிவாளர் ஆபீசில் 'சேவை'
இடைத்தரகர் மனுக்களுக்கு 'உடனடி தீர்வு' பூந்தமல்லி சார் - பதிவாளர் ஆபீசில் 'சேவை'
ADDED : ஆக 16, 2024 12:11 AM

பூந்தமல்லி, பூந்தமல்லி சார் - பதிவாளர் அலுவலகத்தில், மனுவுடன் செல்லும் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.இடைத்தரகர்கள் வாயிலாக செல்லும் மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணப்படுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பூந்தமல்லியில், சார் - பாதிவாளர் அலுவலகம் இயங்குகிறது.
குற்றச்சாட்டு
இங்கு பூந்தமல்லி, காட்டுப்பாக்கம், சென்னீர்குப்பம், நசரத்பேட்டை, வரதராஜபுரம், பாரிவாக்கம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்தவர்கள் பத்திரப் பதிவு, வில்லங்க சான்று, திருமணம் பதிவு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு செல்கின்றனர்.
இந்நிலையில், இந்த அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள், பொதுமக்களிடம் கனிவுடன் பேசுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அத்துடன், இடைத்தரகர்கள் வாயிலாக வரும் மனுக்களுக்கு உடனே தீர்வு காணப்படுவதாகவும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் கிடப்பில் போடப்படுவதாகவும்குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
பூந்தமல்லி சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு, பல்வேறு ஆவணம் பதிவுக்கு, தினமும் 200க்கும் மேற்பட்டோர் செல்கின்றனர். அங்கு பணியாற்றும் ஊழியர்களிடம் பொதுமக்கள் சந்தேகம் கேட்டால், கோபமடைகின்றனர். உள்ளே காத்திருக்கும் பொதுமக்களை வெளியே விரட்டுகின்றனர்.
கூட்டணி வசூல்
பத்திரம் நகல் வேண்டி மனுவுடன் செல்லும் பொதுமக்களிடம், கூடுதல் ஆவணம் கேட்டு அலைக்கழிக்கின்றனர். ஆவணங்கள் சரியாக எடுத்துச் சென்றாலும், வயதான மனுதாரர் நேரில் வர வேண்டும் என்கின்றனர்.
அதேநேரம், இடைத்தரகர் வாயிலாக செல்லும் நபர்களுக்கு மட்டும், மனுதாரர் நேரில் வராமலேயே பத்திர நகல் விரைவாக வழங்கப்படுகிறது.
இதனால் வேறு வழியின்றி, இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து, பொதுமக்கள் பணிகளை முடிக்க வேண்டியுள்ளது.சார் - பதிவாளர் அலுவலக ஊழியர்கள், இடைத்தரகர்களுடன் கூட்டணி வைத்து, வசூலில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, பத்திரப்பதிவு துறை உயரதிகாரிகள் இதை கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் இந்த அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தி, லஞ்சம் வாங்கும் ஊழியர்களை கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.