sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பயணியர் வருகை அதிகரிப்பு கூடுதல் விமானங்கள் இயக்கம்

/

பயணியர் வருகை அதிகரிப்பு கூடுதல் விமானங்கள் இயக்கம்

பயணியர் வருகை அதிகரிப்பு கூடுதல் விமானங்கள் இயக்கம்

பயணியர் வருகை அதிகரிப்பு கூடுதல் விமானங்கள் இயக்கம்


ADDED : மே 05, 2024 12:13 AM

Google News

ADDED : மே 05, 2024 12:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. சமீபத்தில் லோக்சபா தேர்தல் முடிந்து, பள்ளி, கல்லுாரிகளுகு்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பலர் வெளியூருக்கு சுற்றுலா செல்ல துவங்கிவிட்டனர்.

சென்னை விமான நிலையத்தில், இயல்பைவிட பயணியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதற்கிடையே, கோடை கால விமான போக்குவரத்து கால அட்டவணை செயல்பட துவங்கி உள்ளது.

சென்னை - துாத்துக்குடிக்கு வருகை மற்றும் புறப்பாடு என, தினம் ஆறு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. கோடை விடுமுறையை ஒட்டி, தற்போது எட்டு விமானங்களாக இயக்கப்படுகின்றன.

அதேபோல் சென்னை - திருச்சிக்கு எட்டுக்கு விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்த நிலையில் 12 விமானங்களாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

கோவைக்கு இதுவரை 12 விமானங்கள் இயக்கப்பட்டன. இப்போது 16 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

மதுரைக்கு 10ல் இருந்து 14 ஆகவும், பெங்களூருக்கு 16ல் இருந்து 22 ஆகவும், ஹைதராபாத்துக்கு 20ல் 28 ஆகவும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. தவிர, டில்லி, மும்பை, கோல்கட்டா போன்ற நகரங்களுக்கும், கூடுதல் விமான சேவைகள் இயக்கப்படுகின்றன.

மேலும் சென்னை- துர்காப்பூர் இடையே, புதிதாக வாரத்தில் மூன்று நாட்கள், நேரடி விமான சேவைகள், வரும் மே 16 முதல் துவங்க உள்ளது.

சென்னை - பாரீஸ் இருமார்க்கத்திலும், ஏர்பிரான்ஸ் விமான நிறுவனம், இதுவரை வாரத்திற்கு 3 நாட்கள், விமான சேவைகளை இயக்கி வந்தது. பயணியர் கூட்டம் அதிகரிப்பதால், வாரத்திற்கு ஐந்து நாட்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.

லண்டன் விமானம் தாமதம்

லண்டன் செல்லும் விமானத்தில் பயணிப்பதற்காக, வெளியூர் மற்றும் உள்ளூர்களில் இருந்து 314 பயணியர், சென்னை விமான நிலையத்திற்கு நேற்று நள்ளிரவு முதலே வந்தனர்.ஆனால், அதிகாலை 3:30 மணிக்கு வர வேண்டிய விமானம் வரவில்லை. நீண்ட நேரம் காத்திருந்து அதிருப்திடைந்த பயணியர், விமான நிலைய அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.விமான வருகை தாமதமாகும் என, பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம், நேற்று முன்தினம் இரவு, இணையதளம் வாயிலாக பயணியருக்கு தகவல் அளித்ததாக தெரிவிக்கப்பட்டது.தங்களுக்கு தகவல் எதுவும் கிடைக்கவில்லை எனவும், வெளியூர்களில் இருந்து வந்துள்ளதால் எங்கு தங்குவது எனவும் கேள்வி எழுப்பினர்.இதையெடுத்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம், அந்த பயணியரை சென்னை விமான நிலையத்தில் தங்க வைத்து, உணவு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தது.வழக்கமாக வரும் நேரத்தைவிட ஆறு மணி நேரம் தாமதமாக லண்டனில் இருந்து புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணியர் விமானம், நேற்று காலை 9:30 மணிக்கு சென்னையை வந்தடைந்தது. பின், காலை 11:30 மணிக்கு, இங்கிருந்து லண்டனுக்கு புறப்பட்டு சென்றது.








      Dinamalar
      Follow us