sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

'ஜல் ஜீவன்' திட்ட குடிநீர் குழாயில் மோட்டார் பொருத்தி தண்ணீர் திருட்டு

/

'ஜல் ஜீவன்' திட்ட குடிநீர் குழாயில் மோட்டார் பொருத்தி தண்ணீர் திருட்டு

'ஜல் ஜீவன்' திட்ட குடிநீர் குழாயில் மோட்டார் பொருத்தி தண்ணீர் திருட்டு

'ஜல் ஜீவன்' திட்ட குடிநீர் குழாயில் மோட்டார் பொருத்தி தண்ணீர் திருட்டு


ADDED : ஜூன் 09, 2024 12:49 AM

Google News

ADDED : ஜூன் 09, 2024 12:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்:குன்றத்துார் ஒன்றியத்திலுள்ள பல ஊராட்சிகளில்,'ஜல் ஜீவன்' குடிநீர் குழாயில் மோட்டார் பொருத்தி வீடுகளில் தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்படுவதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உள்ளது.

அதிகாரிகள் கள ஆய்வு செய்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

குன்றத்துார் ஒன்றியத்தில், 42 ஊராட்சிகள் உள்ளன. சென்னை புறநகரில் குன்றத்துார் ஒன்றியம் உள்ளதால், இங்கு குடியிருப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பொதுமக்களுக்கு, ஊராட்சிதோறும் தெரு குழாயில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இதுதவிர, மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், வீடுதோறும் குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த இணைப்புகளை, அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்வதே இல்லை.

இதனால், குன்றத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பல வீடுகளில், 'டேங்க்' அமைத்து, ஜல் ஜீவன் குடிநீர் குழாயில் மின் மோட்டார் பொருத்தி, குடிநீரை உறிஞ்சி தேக்கி வைத்து பயன்படுத்துகின்றனர்.

ஒருவரை பார்த்து மற்றவர்களும் இவ்வாறு செய்வதால், மேடான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு சரியாக குடிநீர் கிடைப்பதில்லை. கடந்த சில ஆண்டுகளாக பருவமழை நன்றாக பெய்வதால், குடிநீர் தட்டுப்பாடு பெரிய அளவில் ஏற்படவில்லை.

இதேபோல் குழாய் இணைப்பில் மோட்டார் அமைத்து குடிநீரை உறிஞ்சி எடுத்தால், வறட்சி காலங்களில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உள்ளது.

எனவே, ஊராட்சிதோறும் ஜல் ஜீவன் குடிநீர் இணைப்பு பெற்ற வீடுகளில் அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டு, மின் மோட்டார் பயன்படுத்தி குடிநீரை உறிஞ்சி எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us