sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நாடார் சங்கம் சார்பில் மடிப்பாக்கத்தில் முப்பெரும் விழா

/

நாடார் சங்கம் சார்பில் மடிப்பாக்கத்தில் முப்பெரும் விழா

நாடார் சங்கம் சார்பில் மடிப்பாக்கத்தில் முப்பெரும் விழா

நாடார் சங்கம் சார்பில் மடிப்பாக்கத்தில் முப்பெரும் விழா


ADDED : ஜூலை 21, 2024 01:27 AM

Google News

ADDED : ஜூலை 21, 2024 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மடிப்பாக்கம்:தமிழ்நாடு நாடார் சங்கத்தின் சார்பில் முன்னாள் முதல்வர் காமராஜர், நேசமணி, ம.பொ.சிவஞானம் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு முப்பெரும் விழா சென்னை, மடிப்பாக்கத்தில் நேற்று நடந்தது.

இதில், சிறப்பு விருந்தினராக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். நாடார் சங்க தலைவர் முத்துரமேசு நாடார் தலைமை வகித்தார். பா.ஜ., துணை தலைவர் கருநாகராஜன், விளையாட்டு மேம்பாட்டுபிரிவின் அமர்பிரசாத், பா.ம.க., மாநில பொருளாளர் திலகபாமா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அண்ணாமலை பேசியதாவது:

இந்த நிகழ்ச்சியில் அரசியல் பேசக்கூடாது என எழுதி வாங்கி, போலீசார் அனுமதி அளித்துள்ளனர். இப்போது நடக்கும் பொய்யான ஆட்சியை காமராஜர் ஆட்சி என, சொல்லிக் கொள்கின்றனர்.

சிலர், எந்த ஆதாரமும் இல்லாமல், மிசாவில் சிறை சென்றதாக கூறிக் கொள்கின்றனர்.

ஆனால், காமராஜர் தனது வாழ்நாளில் தேசத்திற்காக, 3000 நாட்கள் சிறை சென்றுள்ளார். தனக்கு கிடைத்த பொறுப்புகளை வேண்டாம் என பலமுறை மறுத்தவர். தமிழகத்தில் ஒன்பது ஆண்டுகள் பொற்கால ஆட்சியை கொடுத்தவர்.

அவரின் வாழ்க்கையில் ஒவ்வொன்றும் நமக்கான பாடம்தான்.

சமூக உழைப்பின் இலக்கணம், நாடார்கள். கடந்த, 1969ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில், 'நாடர்களில் இரு வகை. ஒன்று கிறிஸ்தவ நாடார், மற்றொன்று ஹிந்து நாடார்' எனக்கூறி, அந்த சமூகத்தில் முதல் முதலில் பிளவை ஏற்படுத்தியவர் கருணாநிதிதான். ம.பொ.சிவஞானம் தி.மு.க.வில் இல்லாததால் அவருக்கு மரியாதை செலுத்தமாட்டார்கள்.

தமிழகம் பின் தங்க ஆரம்பித்துள்ளது. தண்ணீர் பற்றாக்குறை, தொழில்துறையில் பாதிப்பு, 20 ஆண்டுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். தமிழகத்தில் கல்வி, மருத்துவ அனைவருக்கும் சமமாக கிடைப்பதில்லை. நவோதயா பள்ளிகள் துவக்க தமிழக அரசு அனுமதி அளிக்காமல் உள்ளது.

நவோதயா என்ற பெயர்தான் பிரச்னை என்றால், காமராஜர் பள்ளி என பெயர் வைத்து விடலாம். இது வந்தால், அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்கும். இளைஞர்களின் வேலை வாய்ப்பின்மை உள்ள மாநிலங்களில் குஜராத், உ.பி., மகராஷ்டிரா, கர்நாடகாவை விட தமிழகத்தில் அதிகமாக, 17.5 சதவீதம் உள்ளது.

'ஆன்-லைன்' வர்த்தகத்திற்கு தொடர்ந்து பா.ஜ., எதிர்ப்பு தெரிவிக்கும். பா.ஜ., ஆட்சி என்பது அடிப்படையில் இருந்து மாற்றம் கொண்டு வர வேண்டியது.

இவ்வாறு அவர் பேசினார்.

பின், மாணவ,மாணவியருக்கு பரிசு, சான்றிதழ்கள், உதவித் தொகை அண்ணாமலை வழங்கினார்.






      Dinamalar
      Follow us