sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கோவில் உண்டியலில் பணம் பைக் திருடியவர் கைது

/

கோவில் உண்டியலில் பணம் பைக் திருடியவர் கைது

கோவில் உண்டியலில் பணம் பைக் திருடியவர் கைது

கோவில் உண்டியலில் பணம் பைக் திருடியவர் கைது


ADDED : மார் 13, 2025 12:38 AM

Google News

ADDED : மார் 13, 2025 12:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆதம்பாக்கம்,ஆதம்பாக்கம், கக்கன் நகர், மூன்றாவது தெருவை சேர்ந்தவர் நாகப்பன், 67. இவர், தனியார் காப்பீடு நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.

கடந்த மாதம், 14ம் தேதி, தனது வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த ஸ்பிளெண்டர் ப்ரோ பைக் திருடுபோனது.

இது குறித்த புகாரின்படி, ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, கண்காணிப்பு கேமரா காட்சிகள் வாயிலாக குற்றவாளியை தேடினர்.

இதில், பைக் திருடியது திருவல்லிக்கேணி, ரோட்டரி நகரை சேர்ந்த சந்தோஷ், 20, என்பது தெரியவந்தது.

அவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர் நண்பர் ஒருவருடன் இணைந்து, பைக் திருடியதும், ஆதம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு கோவிலின் உண்டியலை உடைத்து, பணம் திருடியதும் தெரியவந்தது.

அவரிடமிருந்து, பைக், 1,000 ரூபாய் மீட்கப்பட்டது. பின், அவரை கைது செய்த போலீசார், நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மற்றொருவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us