sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

டூவீலர் மீது லாரி மோதி விபத்து மகன் கண்முன் தாய் பரிதாப பலி

/

டூவீலர் மீது லாரி மோதி விபத்து மகன் கண்முன் தாய் பரிதாப பலி

டூவீலர் மீது லாரி மோதி விபத்து மகன் கண்முன் தாய் பரிதாப பலி

டூவீலர் மீது லாரி மோதி விபத்து மகன் கண்முன் தாய் பரிதாப பலி


ADDED : மார் 11, 2025 07:22 PM

Google News

ADDED : மார் 11, 2025 07:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அண்ணா நகர்:இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில், மகன் கண் முன்னே, தாய் தலை நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

ஓட்டேரி, நியூ டேங்க்மேன், 2வது தெருவைச் சேர்ந்தவர் ஹரிஹரன், 24; தனியார் நிறுவன ஊழியர். இவர், தாய் பத்மினியுடன், 45, 'பஜாஜ் பிளாட்டினா' இருசக்கர வாகனத்தில், அம்பத்துாரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.

அங்கிருந்து, நேற்று முன்தினம் இரவு, 11:30 மணியளவில், ஐ.சி.எப்., கொன்னுார் நெடுஞ்சாலை வழியாக, ஓட்டேரி திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, ஐ.சி.எப்., - அயனாவரம் இடையே, கான்ஸ்டபிள் சாலை அருகில், அதே வழியில் வந்த சிமென்ட் கலவை லாரி, ஹரிஹரனின் வாகனத்தில் மோதியுள்ளது. நிலைத்தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர்.

லாரி சக்கரம் பத்மினி தலையில் ஏறி இறங்கியது. மகன் ஹரிஹரன் கண்முன், தலை நசுங்கி தாய் சம்பவ இடத்திலேயே பலியானர். ஹரிஹரன் லேசான காயங்களுடன் தப்பினார்.

திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார், பத்மினி உடலை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்துக்கு காரணமான, கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் பெரியார், 25 என்பரை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us