/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாடியிலிருந்து விழுந்த நேபாள நபர் உயிரிழப்பு
/
மாடியிலிருந்து விழுந்த நேபாள நபர் உயிரிழப்பு
ADDED : மே 28, 2024 12:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலையூர், சென்னையில் காவலாளியாக பணிபுரிந்து வந்த நேபாள நாட்டைச் சேர்ந்தவர் மாடியில் இருந்து விழுந்து மர்மமான முறையில் உயிரிழந்தார்.
நேபாளத்தைச் சேர்ந்தவர் பிரேம் காடி, 33. சென்னை, சேலையூரை அடுத்த மாடம்பாக்கம், நுாத்தஞ்சேரி பிரதான சாலையில் குடும்பத்தினருடன் தங்கி, அங்குள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் அதிகாலை பணியில் இருந்த பிரேம்காடி, மூன்றாவது மாடியில் மின் விளக்குகளை அணைக்க, மாடி விட்டு மாடி தாண்டிஉள்ளார். அப்போது, தவறி கீழே விழுந்து, படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.