sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கோயம்பேடு அங்காடியில் குப்பை அகற்ற புதிய நிறுவனம்

/

கோயம்பேடு அங்காடியில் குப்பை அகற்ற புதிய நிறுவனம்

கோயம்பேடு அங்காடியில் குப்பை அகற்ற புதிய நிறுவனம்

கோயம்பேடு அங்காடியில் குப்பை அகற்ற புதிய நிறுவனம்


ADDED : ஆக 27, 2024 12:13 AM

Google News

ADDED : ஆக 27, 2024 12:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, கோயம்பேடு காய், கனி, மலர் மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில், திட கழிவுகளை சேகரித்து அப்புறப்படுத்த, தனியார் நிறுவனத்தை தேர்வு செய்யும் பணிகள் துவங்கியுள்ளன.

சென்னை கோயம்பேடில் காய், கனி, மலர், உணவு தானியங்கள் மொத்த விற்பனைக்கான அங்காடி வளாகம் 1996ல் திறக்கப்பட்டது. இந்த வளாகத்தில் திடகழிவுகள் அகற்றம் மிக பெரிய சவாலாக உள்ளது. அழுகும் பொருட்களால் ஏற்படும் கழிவுகள் இங்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

இவற்றை அப்புறப்படுத்த தனியார் நிறுவனங்களை சி.எம்.டி.ஏ., நிர்வாகம் அமர்த்தினாலும், முழுமையான துாய்மை என்ற நிலையை எட்ட முடியவில்லை. இந்நிலையில், இங்கு மொத்த விற்பனை அங்காடி வளாகங்கள், நடைபாதைகள், வாகன நிறுத்துமிடங்கள் ஆகியவற்றில் இருந்து திட கழிவுகளை தினசரி சேகரிக்க புதிய நிறுவனம் தேர்வு செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இங்கு சேகரிப்படும் கழிவுகளை, சென்னை மாநகராட்சியுடன் இணைந்து முறையாக அப்புறப்படுத்தும் பணியை அந்நிறுவனம் மேற்கொள்ளும். இதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது.

'ஓரிரு மாதங்களில் புதிய நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, கழிவுகளை அப்புறப்படுத்தும் பணி ஒப்படைக்கப்படும்' என, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us