sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

உச்சி வெயில் மண்டைய பொளந்தாலும் சேறும் சகதியும் தான் நுாம்பல் சாலை கதி

/

உச்சி வெயில் மண்டைய பொளந்தாலும் சேறும் சகதியும் தான் நுாம்பல் சாலை கதி

உச்சி வெயில் மண்டைய பொளந்தாலும் சேறும் சகதியும் தான் நுாம்பல் சாலை கதி

உச்சி வெயில் மண்டைய பொளந்தாலும் சேறும் சகதியும் தான் நுாம்பல் சாலை கதி


ADDED : ஆக 19, 2024 02:39 AM

Google News

ADDED : ஆக 19, 2024 02:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவேற்காடு,:திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட நுாம்பல் பிரதான சாலை, 1.5 கி.மீ., துாரம் உடையது. இங்கு, பல்வேறு தொழில் துறை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன

இந்த சாலை, பல ஆண்டுகளாக சீரமைக்காமல் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காட்சியளிக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் இந்த சாலையில் சாகச பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலைமை உள்ளது.

இங்கு 10 நாட்களுக்கு முன் மழை பெய்த நிலையில், இன்று வரை சாலையில் வெள்ளம் வடியாமல், ஆங்காங்கே தேங்கி நிற்கிறது.

பெரிய பள்ளங்களுடன் சேறும் சகதியுமாக வயல்வெளி போன்று சாலை காட்சியளிக்கிறது. வாகன ஓட்டிகள், விபத்து அபாயத்திலேயே இச்சாலையில் பயணிக்கின்றனர்.

பாதசாரிகள் நடப்பதற்கு ஏதுவாக போட்டு வைத்துள்ள பெரிய கற்கள், இரவு வேளைகளில் விபத்து ஏற்படுத்தும் நிலைமையில் உள்ளன. பருவ மழை துவங்கினால் நிலைமை மேலும் மோசமாகும்.

எனவே, மழைக்காலம் துவங்கும் முன், சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.






      Dinamalar
      Follow us