ADDED : ஏப் 28, 2024 12:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அண்ணா நகர்:அயனாவரத்தைச் சேர்ந்தவர் சூடாமணி, 70. இவர், நேற்று முன்தினம் இரவு, அண்ணா நகர் நியூ ஆவடி சாலையை கடக்க முயன்றார்.
அப்போது, வேகமாக வந்த பைக் மோதியதில் துாக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு சென்ற அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்து ஏற்படுத்திய தீபக், 22, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

