sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வாகன சோதனையில் இனிமேல் இருவர் மட்டுமே ஈடுபட உத்தரவு

/

வாகன சோதனையில் இனிமேல் இருவர் மட்டுமே ஈடுபட உத்தரவு

வாகன சோதனையில் இனிமேல் இருவர் மட்டுமே ஈடுபட உத்தரவு

வாகன சோதனையில் இனிமேல் இருவர் மட்டுமே ஈடுபட உத்தரவு


ADDED : பிப் 28, 2025 12:34 AM

Google News

ADDED : பிப் 28, 2025 12:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, 'வாகன சோதனையில் இருவர் மட்டுமே பங்கேற்க வேண்டும்' என, போக்குவரத்து போலீசாருக்கு, சென்னை போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை போலீஸ் கமிஷனரகத்தின் கீழ், 55 போக்குவரத்து காவல் நிலையங்கள் உள்ளன. அவற்றில் பணிபுரியும் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார், தினசரி தங்கள் பகுதிகளில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவதோடு, சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீதும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பதில் மட்டுமே, போக்குவரத்து போலீசார் ஆர்வம்காட்டி வருவதாகவும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் கவனம் செலுத்துவதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதற்கு தீர்வு காணும் விதமாக, 'வாகன தணிக்கையில் இனிமேல், ஒரு உதவி ஆய்வாளர், அவருடன் ஒரு காவலரும் மட்டுமே இருக்க வேண்டும். மற்றவர்கள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்' என, போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us