/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெரும்பாக்கத்தில் சலுகை விலை மருந்தகம் திறப்பு
/
பெரும்பாக்கத்தில் சலுகை விலை மருந்தகம் திறப்பு
ADDED : ஆக 28, 2024 12:30 AM
சென்னை, செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், 28,000க்கும் மேற்பட்ட வீடுகளில் 1.10 லட்சம் பேர் வசிக்கின்றனர்.
இங்கு ஏழை, நடுத்தர மக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இந்த பகுதியில், குறைந்த விலையில் மருந்துகள் வாங்க, மத்திய அரசு திட்டமான, 'மக்கள் மருந்தகம்' திறக்க வேண்டும் என, அப்பகுதிமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், பெரும்பாக்கம், நுாக்கம்பாளையம் இணைப்பு சாலை, நேதாஜி நகரில் மக்கள் மருந்தகம் திறக்கப்பட்டது. இங்கு, இதர கடைகளில் வாங்குவதை விட, 30 முதல் 90 சதவீதம் சலுகை விலையில் மருந்துகள் விற்கப்படுகின்றன.
வெளி கடைகளில், 3,000 ரூபாய் மதிப்பிலான மருந்துகள், இங்கு, 600 முதல் 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.