/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உடல் உறுப்புகள் தானம் ஏழு பேருக்கு மறுவாழ்வு
/
உடல் உறுப்புகள் தானம் ஏழு பேருக்கு மறுவாழ்வு
ADDED : ஆக 30, 2024 12:14 AM
சென்னை, செங்கல்பட்டு மாவட்டம், ஊனமாஞ்சேரியைச் சேர்ந்தவர் பாஸ்கர், 37. சுய தொழில் செய்து வந்த இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி உள்ளார்.
கடந்த 25ம் தேதி பைக்கில் சென்ற போது, பாஸ்கர் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார். உயர் சிகிச்சைக்காக, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், 28ம் தேதி மூளைச்சாவு அடைந்தார்.
அவரது உடல் உறுப்புகளை தானம் அளிக்க, குடும்பத்தினர் முன்வந்தனர். இதையடுத்து சிறுநீரகங்கள், கல்லீரல், நுரையீரல், கால் எலும்பு, இதய வால்வுகள், சிறுகுடல் ஆகியவை தானமாக பெறப்பட்டன.
சிறுகுடலை தானமாக பெறுவது, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் முதல் முறை. தானமாக பெறபட்ட ஒரு சிறுநீரகம், கல்லீரல், கால் எலும்பு ஆகியவை, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது.
மற்றொரு சிறுநீரகம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கும், நுரையீரல் மற்றும் சிறுகுடல் அப்பல்லோ மருத்துவமனைக்கும், இதய வால்வு, மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனைக்கும் முறைப்படி வழங்கப்பட்டன. இதன் வாயிலாக, ஏழு பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.