/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
படவேட்டம்மன் கோவில் ஆடி திருவிழா கோலாகலம்
/
படவேட்டம்மன் கோவில் ஆடி திருவிழா கோலாகலம்
ADDED : செப் 02, 2024 01:41 AM

திருவொற்றியூர்:திருவொற்றியூர், கே.வி.கே., குப்பத்தில், பிரசித்தி பெற்ற படவேட்டம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும், ஆடி மாதம் அம்மனுக்கு கூழ்வார்த்தல் திருவிழா, வெகு விமரிசையாக நடக்கும்.
அதன்படி, இவ்வாண்டு கூழ் வார்த்தல் திருவிழா, 30ம் தேதி சிறப்பு அபிஷேகம், பதி அலங்கரித்தல் நிகழ்வுடன் துவங்கியது.
நேற்று காலை, அஜாக்ஸ் காட்டுப்பொன்னியம்மன் கோவிலில் இருந்து, படவேட்டம்மன் உற்சவ தாயார் பிரமாண்ட மலர் அலங்காரத்தில் எழுந்தருளினார்.
உடன், 508 பெண் பக்தர்கள் பால்குடம் ஏந்தியும், காவடி சுமந்தும் அணிவகுத்தனர். மேலும், அலகு வேல், ராட்சத வேல், கூண்டு வேல் குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
படவேட்டம்மன் கோவில் தர்மகர்த்தா, திருவொற்றியூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., கே.பி.சங்கர் தலைமையில், ஊர்வலமானது, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, விம்கோ நகர் மார்க்கெட், சக்திபுரம் பிரதான சாலை வழியாக, கோவிலை வந்தடைந்தது.
பின், உடுக்கை பம்பை வர்ணனையுடன் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.