ADDED : மார் 25, 2024 12:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அசோக் நகர்:சென்னை, அசோக்நகரைச் சேர்ந்தவர் செல்வமணி, 35; கோடம்பாக்கம் மண்டலத்தில் கொசு மருந்து அடிக்கும் பணி செய்து வருகிறார்.
இவர், பள்ளி சிறுவன் ஒருவரை தனியாக அழைத்துச் சென்று, பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து அசோக் நகர் மகளிர் காவல் நிலையத்தில், சிறுவனின் பெற்றோர் புகார் அளித்தனர்.
அதன்படி, 'போக்சோ' சட்டத்தின் கீழ் செல்வமணியை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

