/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுமியை கடத்தி திருமணம் வாலிபருக்கு 'காப்பு'
/
சிறுமியை கடத்தி திருமணம் வாலிபருக்கு 'காப்பு'
ADDED : மே 05, 2024 12:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரும்பாக்கம், சூளைமேடு பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை காணவில்லை என, அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீசில், கடந்த 2ம் தேதி, பெற்றோர் புகார் அளித்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில், வில்லிவாக்கத்தைச் சேர்ந்த திருவெங்கடேஷ், 19, என்பவர், சிறுமியை கடத்தி சென்றது தெரிய வந்தது.
அவரை பிடித்து விசாரித்ததில், சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று, வில்லிவாக்கத்தில் உள்ள கோவிலில் திருமணம் செய்தது தெரியவந்தது. போலீசார், திருவெங்கடேஷை கைது செய்து, சிறுமியை மீட்டு விசாரிக்கின்றனர்.