ADDED : ஆக 07, 2024 12:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நுங்கம்பாக்கம், நுங்கம்பாக்கம், புஷ்பா நகரைச் சேர்ந்தவர் சரவணன், 41. அவரது மனைவி ஜோதி, 40. இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் சரவணன் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அங்கு வந்த போலீசார் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது சரவணன் மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும், உடல் அழுகிய நிலையில் இருந்தது. உடலை மீட்டு, விசாரிக்கின்றனர்.