sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரூ.4,000 கோடி வங்கி கடன் மோசடி புகார் சுரானா மீது வழக்கை ரத்து செய்ய மறுப்பு

/

ரூ.4,000 கோடி வங்கி கடன் மோசடி புகார் சுரானா மீது வழக்கை ரத்து செய்ய மறுப்பு

ரூ.4,000 கோடி வங்கி கடன் மோசடி புகார் சுரானா மீது வழக்கை ரத்து செய்ய மறுப்பு

ரூ.4,000 கோடி வங்கி கடன் மோசடி புகார் சுரானா மீது வழக்கை ரத்து செய்ய மறுப்பு


ADDED : ஆக 29, 2024 07:03 AM

Google News

ADDED : ஆக 29, 2024 07:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: வங்கிகளிடம் இருந்து, ரூ.4,000 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில், சுரானா நிறுவன இயக்குனருக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

சென்னையை தலைமையிடமாக இயங்கிய சுரானா இண்டஸ்ட்ரீஸ், சுரானா பவர் லிமிடெட் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் தினேஷ்சந்த் சுரானா; மேலும், சுரானா கார்ப்பரேஷன் நிறுவனத்தையும், இவர் நிறுவினார்.

இந்நிறுவனங்கள் வாயிலாக வங்கிகளில் கடன் பெற்று முறைகேடு செய்து, தனிப்பட்ட ஆதாயத்துக்காக பயன்படுத்தியதாகவும், அதனால், ரூ.3,986 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகவும், சி.பி.ஐ., சார்பில், 3 வழக்குகள் தொடரப்பட்டன.

நிறுவனங்களுக்கு எதிராகவும், நிர்வாக இயக்குனர் தினேஷ்சந்த் சுரானா, இயக்குனர் விஜய் ராஜ் சுரானா உள்ளிட்டோருக்கு எதிராகவும், அமலாக்கத்துறையும் வழக்கு பதிந்தது.

அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், விஜய் ராஜ் சுரானா மனுக்கள் தாக்கல் செய்தார். அதில், 'எனக்கு எதிராக சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கை, கர்நாடகா உயர் நீதிமன்றம், கடந்த ஏப்ரலில் ரத்து செய்தது. அந்த வழக்கின் அடிப்படையில், அமலாக்கத்துறையும் வழக்கு தாக்கல் செய்திருப்பதால், அவற்றை ரத்து செய்ய வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.

இம்மனுக்கள், நீதிபதிகள் சுப்ரமணியம், சிவஞானம் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன. அமலாக்கத்துறை சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன், சிறப்பு வழக்கறிஞர் ரமேஷ் ஆஜராகினர்.

வழக்கை ரத்து செய்யக் கூடாது என, அமலாக்கத்துறை தரப்பில் பதில் மனுக்களை தாக்கல் செய்தனர்.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ., மேல்முறையீடு செய்துள்ளது. அது, நிலுவையில் உள்ளது.

எனவே, அமலாக்கத்துறையின் வழக்குகளை ரத்து செய்ய முடியாது. மனுதாரர், விசாரணையை எதிர்கொள்ள வேண்டும். ஆதாரங்களின் அடிப்படையில், விசாரணை நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us