sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

டைட்டேனிய மார்பெலும்பு புற்றுநோயாளிக்கு மறுவாழ்வு

/

டைட்டேனிய மார்பெலும்பு புற்றுநோயாளிக்கு மறுவாழ்வு

டைட்டேனிய மார்பெலும்பு புற்றுநோயாளிக்கு மறுவாழ்வு

டைட்டேனிய மார்பெலும்பு புற்றுநோயாளிக்கு மறுவாழ்வு


ADDED : பிப் 15, 2025 12:13 AM

Google News

ADDED : பிப் 15, 2025 12:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,அரிய வகை புற்றுநோயால் பாதிக்கப் பட்ட நோயாளிக்கு, '3டி' தொழில்நுட்ப உதவியுடன், டைட் டேனியம் எலும்பை பயன்படுத்தி, மார்பெலும்பை பொருத்தி மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மெரிடியன் மருத்துவமனையின் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் கென்னி ராபர்ட் ஜே கூறியதாவது:

'காண்ட்ரோசர் கோமா' என்பது, குறுத்தெலும்பு செல்களில் உருவாகும், ஒரு அரிய வகை புற்றுநோய். இந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த வகை புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க முடியாது. இவை பரவக்கூடிய தன்மை குறைவாக இருந்தாலும், வீரியம் அதிகமாக இருக்கும். நுரையீரல் மற்றும்உடலின் பிற பகுதிகளுக்கு பரவக்கூடியது.

எனவே, நோயாளிக்கு பாதிக்கப்பட்ட எலும்பு பகுதிகளை அகற்ற வேண்டியது அவசியம். மார்பு பகுதியில் பாதிப்பு என்பதால், பல்வேறு சிக்கல்கள் காணப்பட்டன.

எனவே, புற்றுநோய் பாதித்த எலும்புகள் அகற்றப்பட்டு, '3டி' தொழில்நுட்ப உதவியுடன், டைட்டேனியத்தால் தயாரிக்கப்பட்ட, செயற்கை மார்பெலும்புகள் பொருத்தப்பட்டன.

இந்த அறுவை சிகிச்சைக்குப்பின், நோயாளியால் சுவாசிக்கவும், தன் இயல்பான வேலைகளையும் செய்ய முடிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us