/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஓ.எம்.ஆர்., அணுகு சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
/
ஓ.எம்.ஆர்., அணுகு சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
ஓ.எம்.ஆர்., அணுகு சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
ஓ.எம்.ஆர்., அணுகு சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
ADDED : மார் 06, 2025 11:49 PM

கண்ணகி நகர், ஓ.எம்.ஆரில் மெட்ரோ ரயில் பணியால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஒக்கியம்மடு, காரப்பாக்கம், சோழிங்கநல்லுார், செம்மஞ்சேரி பகுதிகளில் உள்ள அணுகு சாலைகளில், ஐ.டி., நிறுவனங்களின் ஒப்பந்த வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
இதனால், அணுகு சாலையை பயன்படுத்த முடியாமல், வாகன ஓட்டிகள் திணறினர். மேலும், அணுகு சாலையில், 6 கி.மீ., துாரத்தில், 25 ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளன. இந்த கடைகளாலும் நெரிசல் அதிகரித்தது.
இந்நிலையில், போக்குவரத்துக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்த கடைகளை அகற்ற, கண்ணகி நகர் மற்றும் செம்மஞ்சேரி போக்குவரத்து போலீசார் முடிவு செய்தனர்.
அதன்படி, நேற்று 15 கடைகள் அகற்றப்பட்டன. மீதமுள்ள கடைகள் படிப்படியாக அகற்றப்படும்; போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் கார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் கூறினர்.