sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

குப்பையாக கிடக்கும் 'இ - டாய்லெட்' சீரமைத்து பராமரிக்க வேண்டுகோள்

/

குப்பையாக கிடக்கும் 'இ - டாய்லெட்' சீரமைத்து பராமரிக்க வேண்டுகோள்

குப்பையாக கிடக்கும் 'இ - டாய்லெட்' சீரமைத்து பராமரிக்க வேண்டுகோள்

குப்பையாக கிடக்கும் 'இ - டாய்லெட்' சீரமைத்து பராமரிக்க வேண்டுகோள்


ADDED : ஆக 16, 2024 12:27 AM

Google News

ADDED : ஆக 16, 2024 12:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அண்ணா நகர், சென்னையில், குப்பையுடன் குப்பையாகவும், காட்சிப்பொருளாகவும் கிடக்கும்,'இ-டாய்லெட்' சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

பொதுமக்கள் அதிகம்கூடும் இடங்களில் எளிதாக பயன்படுத்தும் வகையில், சென்னை மாநகராட்சி 'இ - டாய்லெட்' வசதியை அறிமுகப்படுத்தியது.

இதன்படி அண்ணா நகர் மண்டலத்தில் வில்லிவாக்கம், திருமங்கலம் பகுதிகளில், மாநகராட்சி சார்பில் 'இ - டாய்லெட்'கள் அமைக்கப்பட்டன.

பராமரிப்பு இல்லை


ஆரம்பத்தில் பராமரிக்கப்பட்ட நிலையில், நாளடைவில் இவற்றை பராமரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால்,பயன்படுத்த முடியாத அளவிற்கு சீரழிந்து கிடக்கின்றன.

தற்போது பல மாதங்களாகவே, இந்த கழிப்பறைகள் மூடிக் கிடக்கின்றன. குறிப்பாக ஷெனாய் நகர் ஈஸ்ட் கிளப் சாலையிலுள்ள கழிப்பறைகளை, ஆரம்பத்தில் இருந்தே பராமரிக்கவில்லை.

இதனால், தற்போது குப்பையுடன் குப்பையாக கிடக்கின்றன. எனவே, இவற்றை சீரமைத்து பராமரிக்க வேண்டுமென, கோரிக்கை வலுத்து உள்ளது.

இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

அண்ணா நகரில் மட்டுமின்றி கீழ்ப்பாக்கம், அரும்பாக்கம், அமைந்தகரை, திருமங்கலம் உள்ளிட்ட இடங்களிலும், பல ஆண்டுகளாக இந்த நவீன, 'இ - டாய்லெட்'கள் பாழாகி கிடக்கின்றன.

வரிப்பணம் வீணாகிறது


சில இடங்களில் போதிய தண்ணீர் இல்லாததால், பயன்பாடின்றி பூட்டி வைக்கப்பட்டுள்ளன. இதனால், இந்த கழிப்பறைகளைச் சுற்றி, பலர் சிறுநீர் கழித்து விட்டுச் செல்கின்றனர்.

இதனால் வெளியேறும் துர்நாற்றத்தால், சாலையில் செல்லும் பொதுமக்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இந்த இ - டாய்லெட்களுக்கு, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால் இவற்றை பராமரிப்பதை விட்டு விட்டு, மாநகராட்சி புதிதாக நிதி ஒதுக்கீடு செய்து, புதிய கழிப்பறைகளை கட்டி வருகிறது.

இதனால், மக்களின் வரிப்பணம் தான் வீணாகிறது. பாழாகி வரும் இ - டாய்லெட்களை முறையாக பராமரித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us