/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அடையாற்றில் மிதந்த ஆண் சடலம் மீட்பு
/
அடையாற்றில் மிதந்த ஆண் சடலம் மீட்பு
ADDED : ஜூன் 26, 2024 12:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோட்டூர்புரம், சைதாப்பேட்டை, மறைமலை அடிகளார் பாலத்தின் கீழுள்ள அடையாறு ஆற்றில், நேற்று காலை ஆண் சடலம் மிதந்து கொண்டிருந்தது.
இதை பார்த்த அப்பகுதியினர், உடனே கோட்டூர்புரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் அடையாற்றில் மிதந்து கொண்டிருந்த, 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.