/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீட்டில் இருந்து வெளியேறிய சிறுவன் மீட்பு
/
வீட்டில் இருந்து வெளியேறிய சிறுவன் மீட்பு
ADDED : செப் 18, 2024 12:31 AM
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் பெற்றோர், உறவினர் யாருமின்றி, 9 வயது சிறுவன் தனியாக சுற்றி வந்துள்ளான். அவனிடம் பக்தர்கள் விசாரித்துள்ளனர். அப்போது, வீட்டிலிருந்து கோபித்துக் கொண்டு வந்ததாக சிறுவன் தெரிவித்து உள்ளான்.
இதையடுத்து, சிவ காஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் கோவிலுக்கு வந்து சிறுவனை மீட்டு விசாரித்தனர்.
அப்போது, செங்கல்பட்டு மாவட்டம் ஒரத்தி கிராமத்தில் வசிப்பதாகவும், 5ம் வகுப்பு படிப்பதாகவும் தெரிவித்து உள்ளான்.
போலீசார் தகவல் தெரிவித்ததை அடுத்து, சிறுவனின் தாய் மீனாட்சி மற்றும் உறவினர்கள் காஞ்சிபுரம் வந்தனர். சிறுவனை அவனது தாயிடம் போலீசார் ஒப்படைத்தனர்.