sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரூ.2,500 லஞ்சம் அரசு ஊழியருக்கு 'காப்பு'

/

ரூ.2,500 லஞ்சம் அரசு ஊழியருக்கு 'காப்பு'

ரூ.2,500 லஞ்சம் அரசு ஊழியருக்கு 'காப்பு'

ரூ.2,500 லஞ்சம் அரசு ஊழியருக்கு 'காப்பு'


ADDED : ஜூலை 05, 2024 12:39 AM

Google News

ADDED : ஜூலை 05, 2024 12:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர், திருவள்ளூர், ஈக்காடு பகுதியைச் சேர்ந்தவர் குமாரசாமி, 45. அதே பகுதியில் புத்தக கடை நடத்தி வருகிறார். கடையை விரிவுபடுத்த, 2022ல், மாவட்ட தொழில் மையத்தை அணுகி, மத்திய அரசு திட்டத்தின் கீழ் 2 லட்சம் ரூபாயை கடனாக பெற்றார்.

இதற்கான 50,000 ரூபாய் மானியத்தை பெற, ஓராண்டுக்கும் மேலாக, மாவட்ட தொழில் மையத்தை அணுகியுள்ளார்.

அம்மையத்தின் உதவியாளர் சிவகுமார், 47, மானியத்தை விடுவிக்க 2,500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதில் உடன்படாத குமாரசாமி, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். அவர்களின் வழிகாட்டுதல்படி, மாவட்ட தொழில் மைய உதவியாளர் சிவகுமாரிடம், ரசாயன பவுடர் துாவப்பட்ட 2,500 ரூபாயை, குமாரசாமி கொடுத்தார்.

அதை வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., ராமச்சந்திரமூர்த்தி தலைமையிலான போலீசார், சிவகுமாரை கையும் களவுமாக பிடித்து, கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us