sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஆவணமில்லாத ரூ.8.5 லட்சம் கல்லுாரி மாணவரிடம் பறிமுதல்

/

ஆவணமில்லாத ரூ.8.5 லட்சம் கல்லுாரி மாணவரிடம் பறிமுதல்

ஆவணமில்லாத ரூ.8.5 லட்சம் கல்லுாரி மாணவரிடம் பறிமுதல்

ஆவணமில்லாத ரூ.8.5 லட்சம் கல்லுாரி மாணவரிடம் பறிமுதல்


ADDED : மே 15, 2024 11:06 PM

Google News

ADDED : மே 15, 2024 11:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வண்ணாரப்பேட்டை:மின்ட், கண்ணன் ரவுண்டானா சந்திப்பில், வண்ணாரப்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியே 'பைக்'கில் சந்தேகத்திற்கிடமாக வந்த வாலிபரை நிறுத்தி சோதனையிட்டனர். அவரிடம் 8.5 லட்சம் ரூபாய் இருந்தது.

விசாரணையில் அவர், தண்டையார்பேட்டை நேதாஜி நகரைச் சேர்ந்த சேரன், 20, என்பதும், அதே பகுதியில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.காம்., மூன்றாம் ஆண்டு படித்து வருவதும் தெரிந்தது.

மேலும் அவர் படித்துக்கொண்டே, பர்மா பஜாரில் உள்ள பக்ருதீன் என்பவருக்குச் சொந்தமான மொபைல்போன் கடையில், பகுதி நேரமாக வேலை செய்கிறார்.

நேற்று முன்தினம் நள்ளிரவு, சேரனிடம் 8.5 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்த பக்ருதீன், வீட்டில் வைத்து மறுநாள் காலை வரும் போது கொண்டு வருமாறு தெரிவித்துள்ளார்.

ஆனால், சேரன் கொண்டு வந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்து, தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us