ADDED : மே 14, 2024 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொத்தவால்சாவடி, கொத்தவால்சாவடி, அண்ணாபிள்ளை தெருவில், கொத்தவால்சாவடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பைக்கில் சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த இருவரை பிடித்து விசாரித்தனர்.
அவர் முன்னுக்குபின் முரணாக பதிலளித்ததால், அவரது பையை சோதனையிட்டனர்.
இதில், 1 கோடி ரூபாய் இருந்துள்ளது. விசாரணையில், அண்ணா நகரைச் சேர்ந்த அபுல்ஹாஜா, 23, என்பதும், மேடவாக்கத்தைச் சேர்ந்த தனசேகர், 43, என்பதும் பணம் மாற்றும் கடையில் பணி புரிந்து வருவதும் தெரியவந்தது.
உரிய ஆவணங்கள் இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்து இருவரிடமும் விசாரிக்கின்றனர்.

