ADDED : செப் 05, 2024 01:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, மணப்பாக்கம், ராமச்சந்திரா காலனியிலுள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக, விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு ஆய்வு செய்த போது, பெரம்பூர் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த காமேஷ், 45, என்பவர், பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரிந்தது.
நேற்று அவரை கைது செய்த போலீசார், அவரிடம் சிக்கியிருந்த, நான்கு பெண்களை மீட்டு, அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.