sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வசூலுக்காக விலைபோகும் அதிகாரிகள் பஸ் நிற்காத இடத்தில் நிழற்குடை அமைப்பு

/

வசூலுக்காக விலைபோகும் அதிகாரிகள் பஸ் நிற்காத இடத்தில் நிழற்குடை அமைப்பு

வசூலுக்காக விலைபோகும் அதிகாரிகள் பஸ் நிற்காத இடத்தில் நிழற்குடை அமைப்பு

வசூலுக்காக விலைபோகும் அதிகாரிகள் பஸ் நிற்காத இடத்தில் நிழற்குடை அமைப்பு


ADDED : ஆக 29, 2024 12:34 AM

Google News

ADDED : ஆக 29, 2024 12:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, மாநகராட்சி அதிகாரிகள் தங்களது சுய லாபத்திற்காக, பேருந்து நிற்காத இடங்களில் நிழற்குடை அமைத்து, தனியார் நிறுவனங்கள் விளம்பரம் செய்ய அனுமதி அளித்துள்ளதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சமீபகாலமாக, பேருந்து நிழற்குடைகள் அமைப்பதில் பல்வேறு,'தில்லுமுல்லு' வேலைகளில், சில அதிகாரிகள் ஈடுபடுகின்றனர்.

குறிப்பாக, அண்ணாசாலையில் உள்ள ஓமந்துாரார் மெட்ரோ ரயில் நிலையம் அருகே, பேருந்து நிற்காத இடத்தில் நிழற்குடையை அமைக்க, தனியார் நிறுவனத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.

இதேபோல் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட நிழற்குடையை அகற்றிவிட்டு, அவ்விடத்தில் தனியார் நிறுவனம் சார்பில் நிழற்குடை அமைக்க, அனுமதி வழங்கி உள்ளனர்.

சுய லாபத்திற்காக மட்டுமே மாநகராட்சி அதிகாரிகள் இதுபோன்ற அனுமதியை, தனியார் நிறுவனங்களுக்கு வழங்கி வருகின்றனர்.

பொதுவாக, ஒன்றுக்கும் மேற்பட்ட நிழற்குடைகளை ஒரு இடத்தில் அமைக்க, சம்பந்தப்பட்ட இடத்தை மண்டல அதிகாரி ஆய்வு செய்து, தேவையாக இருந்தால் அனுமதி அளிப்பார்.

அதன் பின், தனியார் நிறுவனத்தினர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்திவிட்டு, நிழற்குடை அமைத்து அதில் விளம்பரங்கள் வைப்பர்.

தற்போது, மண்டல அதிகாரிக்கே தகவல் கூறாமல், கீழ்நிலையிலுள்ள சில வசூல் அதிகாரிகளே அனைத்தையும் பார்த்துக் கொள்கின்றனர்.

இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

சென்னை மாநகராட்சி சார்பில், பேருந்து நிற்காத இடங்களில் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது குறித்து, புகார் தெரிவித்து வருகிறோம்.

ஆனால், மாநகராட்சி அதிகாரிகளோ, 'தனியார் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது' என பதில் அளிக்கின்றனர். அதற்கும் கூட, மாநகராட்சியின் அனுமதி அவசியம் வேண்டும்.

பேருந்த நிற்காத இடத்தில் அனுமதி அளிப்பதால், வெளியூரிலிருந்து இங்கு வரும் பயணியர் பெரும்பாலானோர், பேருந்துகள் நிற்காததால் ஏமாற்றம் அடைகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் கவனித்து, பேருந்துகள் நிற்கும் இடங்களில் நிழற்குடை அமைக்க, தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us