/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறப்பு தொழில் கடன் விழா 19ல் நந்தனத்தில் துவக்கம்
/
சிறப்பு தொழில் கடன் விழா 19ல் நந்தனத்தில் துவக்கம்
சிறப்பு தொழில் கடன் விழா 19ல் நந்தனத்தில் துவக்கம்
சிறப்பு தொழில் கடன் விழா 19ல் நந்தனத்தில் துவக்கம்
ADDED : ஆக 15, 2024 12:15 AM
சென்னை, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சார்பில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களை விரிவுப்படுத்தும் வகையில், கடனுதவிகள் வழங்கப்படுகிறது.
அண்ணா சாலை, நந்தனத்தில் இயங்கும் கழகத்தின் சென்னை கிளை அலுவலகத்தில், சிறப்பு தொழில் கடன் விழா, வரும் 19ல் துவங்கி, செப்., 6ம் தேதி வரை நடக்கிறது. இதில், பல்வேறு நிதிதிட்டங்கள் மற்றும் அரசு மானியங்கள் குறித்து விளக்கம் தரப்படும்.
தகுதி பெறும் தொழில்களுக்கு, அரசின் 25 சதவீத முதலீட்டு மானியத்துடன், நிதியுதவியும் வழங்கப்படும். முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் கடன் விண்ணப்பங்களுக்கு, ஆய்வு கட்டணத்தில் 50 சதவீத சலுகை அளிக்கப்படும். புதிய தொழில் முனைவோர், இந்த வாய்பை பயன்படுத்திக் கொள்ள, சென்னை மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.