/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சேக்கிழார் விருதுக்கு ஆன்மிக நுால்கள் வரவேற்பு
/
சேக்கிழார் விருதுக்கு ஆன்மிக நுால்கள் வரவேற்பு
ADDED : மே 17, 2024 12:23 AM
சென்னை, சென்னை சேக்கிழார் ஆராய்ச்சி மையம் மற்றும் முத்துமணி துரைசாமி - துரைசாமி அறக்கட்டளை சார்பில், சிறந்த ஆன்மிக நுால்களுக்கு, சேக்கிழார் விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில், 2023 ஏப்., முதல் 2024 மார்ச் வரை வெளியான, சிறந்த ஆன்மிக நுால்களுக்கு, இந்தாண்டுக்கான சேக்கிழார் விருது வழங்கப்பட உள்ளது.
இதற்கு, தகுதியுள்ள முதல் பதிப்பு நுால்களின் மூன்று பிரதிகளை, வரும் 31ம் தேதிக்குள், 'கே.துரைசாமி, மூத்த வழக்கறிஞர், அறங்காவலர், சேக்கிழார் ஆராய்ச்சி மையம், 54, வெங்கட கிருஷ்ணாபுரம் சாலை, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை -- 28' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தேர்வாகும் நுால்களுக்கு முதல் பரிசாக, 25,000 ரூபாய், இரண்டாம் பரிசாக 15,000 ரூபாய், மூன்றாம் பரிசாக 10,000 ரூபாய் வழங்கப்படும்.
இத்தகவலை சென்னை சேக்கிழார் ஆராய்ச்சி மைய செயலர் சிவாலயம் ஜெ.மோகன் தெரிவித்துள்ளார்.

