/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எஸ்.ஆர்.எம்.,மில் வீரர்கள் ஒதுக்கீடில் மாணவ - மாணவியர் சேர அழைப்பு
/
எஸ்.ஆர்.எம்.,மில் வீரர்கள் ஒதுக்கீடில் மாணவ - மாணவியர் சேர அழைப்பு
எஸ்.ஆர்.எம்.,மில் வீரர்கள் ஒதுக்கீடில் மாணவ - மாணவியர் சேர அழைப்பு
எஸ்.ஆர்.எம்.,மில் வீரர்கள் ஒதுக்கீடில் மாணவ - மாணவியர் சேர அழைப்பு
ADDED : மார் 08, 2025 12:50 AM
சென்னை:காட்டாங்கொளத்துார், எஸ்.ஆர்.எம்., கல்லுாரியில், 2025 - 26ம் கல்வியாண்டிற்கான விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டு பிரிவில் மாணவ - மாணவியரை சேர்ப்பதற்கான தேர்வு முகாம், அக்கல்லுாரி வாளகத்தில் நடக்கிறது. முகாம், ஏப்., 7ல் துவங்கி 12ம் தேதி வரை நடக்கிறது.
பொறியியல், மேலாண்மை, அறிவியல் மற்றும் மனிதநேயம் மற்றும் சட்டம், ஹோட்டல் மேலாண்மை பிரிவுகளில் சேர விரும்புவோர் பங்கேற்கலாம்.
ஏப்., 7ல் இருபாலருக்கான சதுரங்கம் மற்றும் நீச்சல்; 8ல் கிரிக்கெட், இருபாலருக்கும் பால் பேட்மின்டன்; 9ல் டென்னிஸ், தடகளம், பேட்மின்டன், டேபிள் டென்னிஸ்; 10ல் இருபாலருக்கான கூடைப்பந்து, கால்பந்து, வாள் வீச்சு, ஜூடோ போட்டி தேர்வுகள் நடக்கின்றன.
தொடர்ந்து, 11ம் தேதி, கபடி, வில்வித்தை, பளூத்துாக்குதல், பாக்சிங், வாலிபால்; 12ல் ஹாக்கி போட்டிகள் நடக்கின்றன.
உரிய சான்றிதழ்களுடன் தேர்வு நடக்கும். காட்டாகொளத்துார் வளாகத்தில் காலை 8:00 மணிக்கு நேரடியாக பங்கேற்கலாம்.
விபரங்களுக்கு 97911 15678, 87600 62211, 98423 64483 ஆகிய எண்களில் தொடர்புக் கொள்ளலாம். தேர்வு செய்யப்படுவோருக்கு, இலவச கல்வி, விடுதி வசதி உள்ளிட்டவை வழங்கப்படும் என, கல்லுாரியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.