/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வங்கக் கடலில் புயல் மீனவர்களுக்கு எச்சரிக்கை
/
வங்கக் கடலில் புயல் மீனவர்களுக்கு எச்சரிக்கை
ADDED : ஜூலை 20, 2024 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மீஞ்சூர்:வங்கக்கடலில் நேற்று ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் சூழல் உள்ளது.
இன்று ஒடிசா கடற்கரை நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதே நேரம் தமிழக கடலோரப் பகுதிகளில், 35 - 45 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும். இடை இடையே, 65 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
நேற்று மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள எண்ணுார் துறைமுகத்தில், 1ம் எண் கூண்டு ஏற்றப்பட்டது.