/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கால்வாயில் மூழ்கி மாணவர் உயிரிழப்பு
/
கால்வாயில் மூழ்கி மாணவர் உயிரிழப்பு
ADDED : மே 23, 2024 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி, சென்னை ஆவடி அடுத்த பொத்துார், ஜெயலட்சுமி நகரைச் சேர்ந்தவர் ஹரீஷ், 19. இவர், ஆவடியில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில், பி.காம் 2ம் ஆண்டு படித்து வந்தார்.
விடுமுறையில் வீட்டில் இருந்த அவர், நேற்று மதியம் நண்பர்களுடன், ஆரிக்கம்பேடு கிராமம் அருகே உள்ள கிருஷ்ணா நதி நீர் கால்வாயில் குளித்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக, ஆழமான பகுதியில் சேற்றில் சிக்கி, நீரில் மூழ்கி பலியானார். ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விசாரிக்கின்றனர்.

