sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தாசில்தார், இரு போலீசாரை சிக்க வைத்தவருக்கு மிரட்டல்

/

தாசில்தார், இரு போலீசாரை சிக்க வைத்தவருக்கு மிரட்டல்

தாசில்தார், இரு போலீசாரை சிக்க வைத்தவருக்கு மிரட்டல்

தாசில்தார், இரு போலீசாரை சிக்க வைத்தவருக்கு மிரட்டல்


ADDED : ஜூன் 04, 2024 12:34 AM

Google News

ADDED : ஜூன் 04, 2024 12:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சோழிங்கநல்லுார் மண்டலம், 194வது வார்டு, ஈஞ்சம்பாக்கத்தில், சாலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர் பொன் தங்கவேல் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

சாலை ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை நிறைவேற்ற, சென்னை மாநகராட்சி தெற்கு வட்டார துணை கமிஷனர் அலுவலகத்தில் பணிபுரிந்த சிறப்பு தாசில்தார் சரோஜா, 1 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

கடந்த மாதம் 14ம் தேதி, பொன் தங்கவேலிடம் இருந்து, 3 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது, சரோஜா, அவரது கணவரும், போலீஸ்காரருமான பிரவீன், மற்றொரு போலீஸ்காரர் அருண் ஆகியோரை, லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், அவர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக, நீலாங்கரை போலீசில் பொன் தங்கவேல் புகார் அளித்துள்ளார்.

அதில்,'அடையாறு, கஸ்துாரிபாய் நகரைச் சேர்ந்த ஜவகர் என்ற நபர் நேரடியாக வந்து, இனிமேல் நீ உயிரோடு இருந்தால் தானே புகார் கொடுப்பாய். எப்படி ஆக்கிரமிப்பை எடுக்கிறாய் என பார்க்கிறேன்' என, மிரட்டல் விடுத்ததாக கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பாக, நீலாங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us