sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

லஞ்சம் பெற்று அலைக்கழிப்பு? தாசில்தார் பணியிட மாற்றம்

/

லஞ்சம் பெற்று அலைக்கழிப்பு? தாசில்தார் பணியிட மாற்றம்

லஞ்சம் பெற்று அலைக்கழிப்பு? தாசில்தார் பணியிட மாற்றம்

லஞ்சம் பெற்று அலைக்கழிப்பு? தாசில்தார் பணியிட மாற்றம்


ADDED : பிப் 23, 2025 12:15 AM

Google News

ADDED : பிப் 23, 2025 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டை அடுத்த மேல்முதலம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி, 64; விவசாயி. இவர், தாசில்தார் உதவியாளரிடம் பணம் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

விவசாயி ரவி கூறியதாவது:

மேல்முதலம்பேடு கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் தயாளன், சாமிநாதன் ஆகியோருக்கு சொந்தமான, 70 சென்ட் நிலத்தை அளந்து உட்பரிவு செய்து பட்டா வழங்க, கடந்த ஆண்டு ஜமாபந்தியில் மனு கொடுத்தோம்.

நடவடிக்கை இல்லாததால், தாசில்தார் சரவணகுமாரியை நேரில் சந்தித்து, அவர் தெரிவித்தபடி, தலைமை அளவர் விஜயிடம், 60,000 ரூபாய் கொடுத்தோம். மூன்று நாள் கழித்து, ஆன்லைனில், உட்பிரிவு பட்டா பதிவிறக்கம் செய்து கொள்ளும்படி தெரிவித்து அனுப்பினர்.

பல நாட்கள் கடந்தும், பட்டா வராத நிலையில், தலைமை அளவர் விஜயிடம் கொடுத்த பணம், தாசில்தாரை சென்றடையவில்லை என்பது தெரியவந்தது. வேறு இடத்திற்கு மாற்றலான விஜயை தொடர்பு கொண்டு, 50,000 ரூபாயை திரும்ப பெற்றோம்.

பின், தாசில்தார் உதவியாளர் காந்தி, என்பவரிடம், 40,000 ரூபாய் கொடுத்தோம். சாட்சிக்காக, பணம் கொடுப்பதை வீடியோ எடுத்துக் கொண்டோம். அந்த பணத்தில், 20,000 ரூபாய் மட்டுமே தாசில்தாருக்கு சென்றதால், மீண்டும் அலைக்கழித்தார்.

தமிழக முதல்வர் தனி பிரிவுக்கும், லஞ்ச ஒழிப்பு துறைக்கும் புகார் மனு அனுப்பினேன். அதன் மீதான விசாரணை தற்போது நடந்து வருகிறது.

இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தால், கும்மிடிப்பூண்டி தாசில்தார் சரவணகுமாரி, பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

அவர், மாநெல்லுார் சிப்காட் திட்ட தனி தாசில்தாராக மாற்றப்பட்டார். அந்த பொறுப்பில் இருந்த ராஜேந்திரன், கும்மிடிப்பூண்டி தாசில்தாராக நியமிக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us