sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஆர்.பி.எப்., ஆபீசில் பெண் தற்கொலை பலாத்காரம் செய்த டீ மாஸ்டர் கைது

/

ஆர்.பி.எப்., ஆபீசில் பெண் தற்கொலை பலாத்காரம் செய்த டீ மாஸ்டர் கைது

ஆர்.பி.எப்., ஆபீசில் பெண் தற்கொலை பலாத்காரம் செய்த டீ மாஸ்டர் கைது

ஆர்.பி.எப்., ஆபீசில் பெண் தற்கொலை பலாத்காரம் செய்த டீ மாஸ்டர் கைது


UPDATED : மார் 22, 2024 12:13 PM

ADDED : மார் 22, 2024 12:13 AM

Google News

UPDATED : மார் 22, 2024 12:13 PM ADDED : மார் 22, 2024 12:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எழும்பூர், எழும்பூர் ரயில் நிலைய ஆர்.பி.எப்., இன்ஸ்பெக்டர் அலுவலகத்தில் போலீசார் ஓய்வறை உள்ளது. கடந்த 17ம் தேதி, அந்த அறை உள் பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.

போலீசார் கதவை உடைத்து பார்த்தபோது 40 வயது பெண் ஒருவர், துாக்கிட்டு பிணமாக இருந்தார். புகாரின்படி எழும்பூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

ஆதரவற்ற நிலையில் இருந்த அடையாளம் தெரியாத அந்த பெண், சில நாட்களாக எழும்பூர் ரயில் நிலையத்தில் சுற்றி திரிந்துள்ளார். சம்பவத்தன்று பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளில், அந்த பெண்ணுடன், மற்றொருவர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நேற்று அந்த நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில் அவர் திருச்சி, மணப்பாறையை சேர்ந்த கருப்பையா,50, என தெரிந்தது. தாம்பரம், சானட்டோரியத்தில் தேநீர் கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்துள்ளார்.

எழும்பூர் ரயில் நிலையம் வந்த கருப்பையா, தனியாக சுற்றித் திரிந்த அந்த பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து அந்த பெண் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துக்கொண்டது விசாரணையில் தெரிந்தது.

அந்த பெண் யாரென போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us