/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆசிரியர் இல்லாத பழவேரி பள்ளி குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறி
/
ஆசிரியர் இல்லாத பழவேரி பள்ளி குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறி
ஆசிரியர் இல்லாத பழவேரி பள்ளி குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறி
ஆசிரியர் இல்லாத பழவேரி பள்ளி குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறி
ADDED : ஜூன் 25, 2024 12:52 AM

உத்திரமேரூர், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், பழவேரி கிராமத்தில் இயங்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், கடந்த 10 நாட்களாக ஆசிரியர் யாரும் இல்லாமல் குழந்தைகள் மட்டும் வந்து செல்வதால், அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
பழவேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 30 குழந்தைகள் பயில்கின்றனர். இப்பள்ளியில், தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் என இரண்டு ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும்.
சில நாட்களாக தலைமை ஆசிரியர் விடுப்பில் உள்ளார். உதவி ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால், பள்ளியில் ஆசிரியர் யாரும் இல்லாமல் மாணவர்கள் வெறுமனே வகுப்பறையில் இருந்து விட்டு, மாலையில் வீடு திரும்புகின்றனர்.
இதுகுறித்து, பழவேரி கிராமத்தினர் கூறியதாவது:
ஆசிரியர் இல்லாமல் குழந்தைகள் வகுப்பறையில் உள்ளதால், அம்மாதியான நேரங்களில் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
எனவே, பழவேரி ஊராட்சி தொடக்கப் பள்ளிக்கு ஆசிரியர்களை நியமித்து, முறையாக பள்ளி செயல்பட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,
இவ்வாறு அவர்கள் கூறினர்.
காஞ்சிபுரம் மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஆசிரியர் வராதது குறித்து, முறையாக விசாரிக்கப்படும். ஆசிரியர்களுக்கான பயிற்சி, கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது. ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ள பள்ளிகளில், விரைவில் ஆசிரியர் பணியமர்த்தப்பட உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.