/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாம்பரம் ரயில் ரத்து எதிரொலி அரசு பேருந்துகளில் நெரிசல்
/
தாம்பரம் ரயில் ரத்து எதிரொலி அரசு பேருந்துகளில் நெரிசல்
தாம்பரம் ரயில் ரத்து எதிரொலி அரசு பேருந்துகளில் நெரிசல்
தாம்பரம் ரயில் ரத்து எதிரொலி அரசு பேருந்துகளில் நெரிசல்
ADDED : ஆக 04, 2024 12:45 AM

சென்னை,தாம்பரம் ரயில்வே பணிமனையில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருவதால், விரைவு மற்றும் மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நேற்று முதல் 14ம் தேதி வரை, காலை 9:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை, சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு தடத்தில், 63 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த நேரங்களில், சென்னை கடற்கரை முதல் பல்லாவரம் வரையிலும், செங்கல்பட்டு முதல் கூடுவாஞ்சேரி வரையிலுமே, ரயில்கள் இயக்கப்பட்டன. வழக்கமான மின்சார ரயில்களின் சேவை கிடைக்காததால், பயணியர் பலரும் மாநகர பேருந்துகளில் பயணித்தனர்.
தாம்பரத்தில் இருந்து புறநகர் மற்றும் சென்னை பகுதிகளுக்கு இயக்கப்பட்ட அனைத்து வழித்தட பேருந்துகளிலும், வழக்கத்தைவிட இரு மடங்கு பயணியர் கூட்டம் அலைமோதியது.
குறிப்பாக, கிண்டி வழியாக பிராட்வேக்கு செல்லும் மாநகர பேருந்துகளில் பயணியர் கூட்டம் அலைமோதியது. நெரிசலில் சிக்கி, பயணியர் அவதிப்பட்டனர்.
தவிர, பொது வாகன பயன்பாடு, தனி நபர் வாகனங்கள் அதிகமாக இயக்கப்பட்டதால், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மறைமலை நகர், பொத்தேரி, கூடுவாஞ்சேரி, வண்டலுார், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதிகளில், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசார் நியமிக்கப்பட்டிருந்தும், நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
பயணியர் சிலர் கூறியதாவது:
தாம்பரம் தடத்தில், மின்சார ரயில்கள் ரத்து செய்து அறிவிக்கப்பட்டது. இதற்கு மாற்றாக மாநகர போக்குவரத்து கழகம் கூடுவாஞ்சேரி, பல்லாவரம், கிண்டி, பிராட்வேக்கு கூடுதல் மாநகர பேருந்துகளை இயக்குவதாக அறிவித்தது.
ஆனால், போதிய அளவில் பேருந்துகள் இல்லாததால், பயணியர் நெரிசலில் சிக்கி அவதிப்பட்டனர். வரும் 14ம் தேதி வரை, மின்சார ரயில்கள் ரத்து செய்திருப்பதால், இந்த தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.