sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

10 நிமிடத்தில் பாய்ந்த 140 அம்புகள் வில்வித்தையில் சிறுவன் புது சாதனை

/

10 நிமிடத்தில் பாய்ந்த 140 அம்புகள் வில்வித்தையில் சிறுவன் புது சாதனை

10 நிமிடத்தில் பாய்ந்த 140 அம்புகள் வில்வித்தையில் சிறுவன் புது சாதனை

10 நிமிடத்தில் பாய்ந்த 140 அம்புகள் வில்வித்தையில் சிறுவன் புது சாதனை


ADDED : செப் 16, 2024 02:43 AM

Google News

ADDED : செப் 16, 2024 02:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:முகப்பேரைச் சேர்ந்தவர் நிதேஷ், 6; ஒன்றாம் வகுப்பு மாணவர். மூன்று வயதில் இருந்தே சிறுவன் நிதேஷுக்கு வில்வித்தையில் ஆர்வம் அதிகம். இதற்காக, ஐந்து வயது முதல் முகப்பேரில் உள்ள அர்ஜுனா வில்வித்தை அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார்.

சிறுவனின் ஆர்வத்திற்கு ஏற்ப பயிற்சியளிக்கப்பட்டது. வில்வித்தையில் உலக சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கில், தீவிர பயிற்சி மேற்கொண்டு வந்தார்.

இந்த நிலையில், உலக சாதனைக்கான முயற்சியில், நேற்று முன்தினம் பானையின் மீது நின்றபடி, 14 நிமிடங்களில் 140 அம்புகள் எய்யும் வகையில் திட்டமிடப்பட்டது.

முகப்பேரில் உள்ள அகாடமியில் இந்த நிகழ்வு நடந்தது. ஆனால், சிறுவன் நிதேஷ், பானையில் நின்றபடி, 10 நிமிடம் 22 வினாடியிலே, 140 அம்புகளை எய்து, சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.

'வேர்ல்டு யங் அச்சுவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்' புத்தகம், நிதேஷின் சாதனையை பதிவு செய்து, சான்றிதழ் வழங்கியது.

இதுகுறித்து, சிறுவனின் குடும்பத்தினர் கூறுகையில், ''நிதேஷ் தாத்தா - பாட்டி அரவணைப்பில் வளர்ந்து வருகிறார். அவரது ஆர்வத்தை கண்டு, வில்வித்தையில் பயிற்சி கொடுத்தோம். மாநில மற்றும் தேசிய அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, ஏராளமான பதக்கங்களை வென்றுள்ளார்,'' என்றனர்.






      Dinamalar
      Follow us