sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

திருமணத்திற்கு காதலன் மறுப்பு இளம்பெண் தீக்குளிப்பு

/

திருமணத்திற்கு காதலன் மறுப்பு இளம்பெண் தீக்குளிப்பு

திருமணத்திற்கு காதலன் மறுப்பு இளம்பெண் தீக்குளிப்பு

திருமணத்திற்கு காதலன் மறுப்பு இளம்பெண் தீக்குளிப்பு


ADDED : ஆக 21, 2024 12:40 AM

Google News

ADDED : ஆக 21, 2024 12:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி, கொளத்துாரைச் சேர்ந்த 28 வயது இளம்பெண், அழகு நிலையம் ஒன்றில் பணிபுரிகிறார். கருத்து வேறுபாடு காரணமாக, முதல் கணவரை விவாகரத்து செய்து, தனியாக வசிக்கிறார்.

திருமணத்திற்கு முன், சமூக வலைதளமான 'பேஸ்புக்' வாயிலாக, ஆவடி, அய்யப்பன் நகரைச் சேர்ந்த ஜெய் குகன், 28, என்பவருடன் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் காதலாக மாறியது.

நேற்று முன்தினம் மாலை, ஜெய்குகன் வீட்டிற்கு சென்ற இளம்பெண், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறியுள்ளார். அதற்கு, அவர் மறுத்து உள்ளதாக தெரிகிறது.

இதனால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இளம்பெண், தான் மறைத்து எடுத்து வந்திருந்த கேன் பெட்ரோலை உடலில் ஊற்றி, தீ வைத்து கொண்டார்.

ஜெய்குகன் அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு, தீவிர சிகிச்சை நடந்து வருகிறது. ஆவடி போலீசார், விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us