/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோபாலபுரத்தில் 'பாக்ஸிங்' அகாடமி ; முதல்வர் இன்று திறப்பு
/
கோபாலபுரத்தில் 'பாக்ஸிங்' அகாடமி ; முதல்வர் இன்று திறப்பு
கோபாலபுரத்தில் 'பாக்ஸிங்' அகாடமி ; முதல்வர் இன்று திறப்பு
கோபாலபுரத்தில் 'பாக்ஸிங்' அகாடமி ; முதல்வர் இன்று திறப்பு
UPDATED : பிப் 25, 2025 07:31 AM
ADDED : பிப் 24, 2025 11:51 PM

சென்னை, மத்திய சென்னை தொகுதி எம்.பி.,யான தயாநிதி மாறனின் தொகுதி மேம்பாட்டு நிதியாக 2 கோடி ரூபாய், ஆயிரம்விளக்கு தொகுதி எம்.எல்.ஏ., எழிலன் தொகுதி மேம்பாட்டு நிதியாக 1 கோடி ரூபாய், தமிழக அரசின் நிதியாக 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, கோபாலபுரம் விளையாட்டு மைதானத்தில், குத்துச்சண்டை அகாடமி அமைக்கும் பணிகள் நடந்தன.
இந்த அகாடமி, ஒரு உடற்பயிற்சி கூடம், இரண்டு பாக்சிங் ரிங், 750 பார்வையாளர்கள் அமரும் மாடம் என 2,500 சதுரடி பரப்பில் அமைந்துள்ளது.
இதை, முதல்வர் ஸ்டாலின் இன்று முற்பகல் 11:00 மணிக்கு திறந்து வைக்க உள்ளார். இந்நிலையில், அங்கு நடந்த இறுதி கட்டப்பணிகளை, துணை முதல்வர் உதயநிதி, நேற்று ஆய்வு செய்தார்.