/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரயிலில் அடிபட்டு சிதைந்தவர் உடல் அடையாளம் தெரியாமல் அடக்கம் 42 நாளாக தேடி வந்த குடும்பத்தினர் அதிர்ச்சி
/
ரயிலில் அடிபட்டு சிதைந்தவர் உடல் அடையாளம் தெரியாமல் அடக்கம் 42 நாளாக தேடி வந்த குடும்பத்தினர் அதிர்ச்சி
ரயிலில் அடிபட்டு சிதைந்தவர் உடல் அடையாளம் தெரியாமல் அடக்கம் 42 நாளாக தேடி வந்த குடும்பத்தினர் அதிர்ச்சி
ரயிலில் அடிபட்டு சிதைந்தவர் உடல் அடையாளம் தெரியாமல் அடக்கம் 42 நாளாக தேடி வந்த குடும்பத்தினர் அதிர்ச்சி
ADDED : ஆக 09, 2024 12:47 AM

குமரன் நகர், காணாமல் போன இளைஞரை உறவினர்கள் தேடி வந்த நிலையில், வீட்டின் அருகே ரயிலில் அடிபட்டு உயிரிழந்து, அடையாளம் தெரியாத உடல் என, அடக்கம் செய்யப்பட்டது, 42 நாட்களுக்கு பின் தெரியவந்துள்ளது.
மேற்கு மாம்பலம், வண்டிக்காரன் தெருவை சேர்ந்தவர், தேன்மொழி, 65. இவரது மகன் நிவாஸ் கிருஷ்ணன், 35. பெயின்டராக வேலை பார்த்தார். இவர் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி, அவ்வப் போது வேலைக்கு செல்வதில்லை.
இந்நிலையில், கடந்த ஜூன் 25 ம் தேதி இரவு, மதுபோதையில் வீட்டுக்கு வந்த நிவாஸ் கிருஷ்ணனை, அவரது தாய் மற்றும் சகோதரிகள் கண்டித்துள்ளனர். இதனால், கோபித்துக் கொண்டு நிவாஸ் கிருஷ்ணன் வீட்டை விட்டு சென்றார்.
இதுபோல அவ்வப்போது வீட்டை விட்டு வெளியேறுவதும், சில நாட்களில் வீடு திரும்புவதும் வாடிக்கை. அதேபோல், வீடு திரும்பி வருவார் என குடும்பத்தினர் நினைத்தனர்.
ஆனால், நாட்கள் கடந்தும் நிவாஸ் கிருஷ்ணன் வீடு திரும்பாததால், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் அவரை தேடினர். அவர் கிடைக்காததால், கடந்த ஜூலை 7 ம் தேதி, குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து குமரன் நகர் போலீசார் விசாரித்து வந்தனர்.
சமூக வலைதளத்தில் நிவாஸ் கிருஷ்ணன் படத்தை பதிவிட்டு, கண்டுபிடித்துக் கொடுக்குமாறு அவரது நண்பர்களும் தேடியுள்ளனர். உறவுகள் அறக்கட்டளை என்ற அமைப்பின் வாயிலாகவும் உதவி கோரினர். சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே அடையாளம் தெரியாத நபர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததுள்ளதாக, ஒரு புகைப்படத்தை நிவாஸின் உறவினருக்கு அனுப்பியுள்ளனர்.
ரயிலில் அடிபட்டதில், இறந்தவரின் தலை, முகம் சிதைந்திருந்தது. அனால், இறந்து போன நபர் அணிந்திருந்த உடைகளை வைத்தும் உடல்வாகு மற்றும் கையில் அணிந்திருந்த காப்பு வாயிலாக, இறந்தது நிவாஸ் கிருஷ்ணன் என்பதை குடும்பத்தினர் உறுதி செய்தனர்.
நிவாஸ் கிருஷ்ணன் வீட்டை விட்டு சென்ற அன்று, ரயில் முன் குதித்து தற்கெலை செய்துள்ளார். அவரது உடலை கைப்பற்றிய ரயில்வே போலீசார், அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் அனுப்பி உள்ளனர். இறந்தவர் உடலை, ஜூலை 12 ம் தேதி வரை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் வைத்திருந்தனர்.
ஒரு மாதத்திற்கு மேலாக உடலை யாரும் உரிமை கோராததாலும், அடையாளம் காண யாரும் முன்வராததாலும், மூலக்கொத்தளம் பகுதியில் அடக்கம் செய்ய ரயில்வே போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குமரன் நகர் போலீசார் விசாரணையில் இத்தகவல் தெரியவந்ததை எடுத்து, குடும்பத்தினருக்கு விபரம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நிவாஸ் கிருஷ்ணன் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்ற குடும்பத்தினர், அங்கு இறுதிச் சடங்குகளை செய்தனர்.
இதுகுறித்து குடும்பத்தினர் கூறியதாவது:
காணாமல் போன மறு நாளே, ரயில் தண்டவாளத்தில் அடிபட்டு இறந்து கிடந்த நிவாஸ் கிருஷ்ணன் குறித்து, போலீசார் முறையாக விசாரித்திருந்தால், அடையாளம் தெரிந்திருக்கும். வீட்டின் அருகிலேயே அவர் இறந்து கிடந்தாலும், 42 நாட்களாக அவரை தேடி வந்தோம்.
எங்கேயாவது உயிரோடு இருப்பார் என்ற நம்பிக்கையில் இருந்தோம். ஆனால், அடையாளம் தெரியாத ஆதரவற்ற உடல் என அடக்கம் செய்துவிட்டனர். இறுதியாக ஒரு முறை அவரை பார்க்க முடியாமல் போனது.
இவ்வாறு குடும்பத்தினர் கூறினர்.