sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

துாத்துக்குடி தொழிலதிபரை சென்னையில் கடத்திய கும்பல்

/

துாத்துக்குடி தொழிலதிபரை சென்னையில் கடத்திய கும்பல்

துாத்துக்குடி தொழிலதிபரை சென்னையில் கடத்திய கும்பல்

துாத்துக்குடி தொழிலதிபரை சென்னையில் கடத்திய கும்பல்


ADDED : ஜூன் 19, 2024 12:25 AM

Google News

ADDED : ஜூன் 19, 2024 12:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரவாயல்,

துாத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் திருநகரை சேர்ந்தவர் ஹர்ஷவர்த்தன், 30. தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, பலரிடம் கடன் வாங்கி திரும்ப செலுத்த முடியாத நிலையில் இருந்துள்ளார்.

கடன் கொடுத்தவர்கள் திருப்பிக் கேட்டு நெருக்கடி கொடுத்து வந்ததால், இரண்டு மாதங்களாக சென்னை மதுரவாயல், மதுரை நாயக்கன் தெருவில் உள்ள உறவினர் மீனாட்சி சுந்தரம் என்பவர் வீட்டில் தங்கியிருந்தார்.

இந்நிலையில், 16ம் தேதி மாலை ஹர்ஷவர்த்தனும், மீனாட்சி சுந்தரமும், மேட்டுக்குப்பம் பிரதான சாலையில் உள்ள ஹோட்டலில் உணவருந்தி விட்டு வெளியே வந்தனர். அப்போது, காரில் வந்த கும்பல், ஹர்ஷவர்த்தனை கடத்திச் சென்றனர். தடுக்க முயன்ற மீனாட்சி சுந்தரத்தை, கொன்று விடுவதாக மிரட்டி சென்றனர்.

இது குறித்து நேற்று முன்தினம் மதுரவாயல் காவல் நிலையத்தில் மீனாட்சி சுந்தரம் புகார் அளித்தார். தன் உறவினர் ஹர்ஷவர்த்தனை, நெல்லையை சேர்ந்த ரகு மற்றும் ஒன்பது பேர் சேர்ந்து, காரில் கடத்தி சென்றதாக புகாரில் தெரிவித்திருந்தார். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us