ADDED : ஏப் 27, 2024 12:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரும்பாக்கம், மேடவாக்கம் அடுத்த பெரும்பாக்கம், எழில்நகர், 128 பிளாக்கை சேர்ந்தவர் உதயா-, சரண்யா தம்பதியர்.
நேற்று இருவரும் வேலைக்கு சென்று விட்டு, மாலை வீடு திரும்பிய போது, வீட்டின் கதவு உள் பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. வெகுநேரம் தட்டியும் கதவு திறக்கப்படாததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது, அவர்களின் 8 வயது மகள் அஸ்வந்தி, ஜன்னல் கயிற்றில் கட்டப்பட்டிருந்த திரைச்சீலை கழுத்தில் இறுக்கப்பட்டு மயங்கிய நிலையில் இருந்தார்.
சிறுமியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றபோது, சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பெரும்பாக்கம் போலீசார்  விசாரிக்கின்றனர்.

